இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதின்நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) மாலை பருத்தித்துறை அருகே இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதின்நான்கு மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed